சாலை விபத்தில் 10 பேர் படுங்காயம்

கூலாய், ஏப்ரல் 03-

கூலாய், வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 36.6 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் சுற்றுலா பேருந்து ஒன்று லாரியுடன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுங்காயங்களுக்கு ஆளாகியதாக தெரியவந்துள்ளது.

இன்று காலை 6.28 மணியளவில் இவ்விபத்துக் குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு புகார் கிடைக்க பெற்றதாக கூலாய் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் தலைவர் பய்ருஸ் ஹில்மி மோஹட் ஹில்மி கூறினார்.

33 வயதுடைய பேருந்து ஓட்டுநரின் இடது கால் இருக்கையில் சிக்கி கொண்டதுடன் பேருந்தில் பயணித்த 8 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக பய்ருஸ் ஹில்மி அறிவித்தார்.

விபத்தில் சிக்கிய 30 வயதுடைய நான்கு பெண்களுக்கு அவசர சிகிச்சை வழங்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பய்ருஸ் ஹில்மி மேலும் தெரிவித்தார்.

கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூரை நோக்கி 8 பயணிகளுடன் பயணித்த அந்த சுற்றுலா பேருந்து லாரியுடன் மோதியதில் விபத்துக்குள்ளாகியதாக அவர் தெளிவுப்படுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்