கோலாலம்பூர், ஏப்ரல் 24-
நாடு முழுவதும் நேற்று பதிவாகியுள்ள சாலை விபத்துக்களின் மொத்த எண்ணிக்கை 1,879 ஆக குறைந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 1,959 ஆக இருந்த வேளையில் நேற்று மட்டுமே 80 விபத்துக்கள் குறைந்திருப்பதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறை முகநூல் அகப்பக்கத்தில் தகவல் வெளியிட்டிருந்தது.
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்திருப்பதாக அது கூறியுள்ளது. முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் நேற்று பதிவாகியுள்ள இறப்புகளின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன.
விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக இருந்த வேளையில் நேற்று 13 விபத்துக்களாக குறைந்திருப்பதாக தெரியப்படுகின்றது.