சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக இளைஞனுக்கு தண்டனை விதிக்கப்பட்டது

பச்சோக், மே 15-

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வெல்டர் பணியாளர் ஒருவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு பிரம்படி விதிக்க கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

23 வயது முகமது இக்ராம் இர்பான் சம்சுதீன் என்கிற அந்த வெல்டர் பணியாளர் நீதிபதி நிக் ஹப்ரி முகமது முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டு அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டதை அடுத்து இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறை மற்றும் பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 376(1) ஆவது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த மே 4 ஆம் தேதி இரவு 8.20 மணியளவில் பச்சோக், ஜெலாவத் -டில் உள்ள ஒரு கட்டிடத்தில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்