பெட்டாலிங் ஜெயா, 24 மார்ச்
புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அவதுயுறும் சிறார்களுக்கான சி.சி. ஏ. எம் எனப்படும் மலேசிய குழந்தைகள் புற்றுநோய் அமைப்பை தேசிய ஒருமைப்பாடு துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தொடக்கி வைத்தார்.
மலேசிய குழந்தைகள் புற்றுநோய் அமைப்பை தொடக்கி வைத்து பேசுகையில், குழந்தைகள் முறையாக மருத்துவ உதவிகள் பெறுவதற்கு, குறித்த நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் அவர்களின் உயிர்கள் காப்பாற்ற முடியும் என்றார்.
மேலும், இது போன்ற அமைப்புகளின் வழி புற்றுநோயால் பாதிக்க சிறார்களுக்கு நிதி உதவி திரட்டவும், அதனை சிறார்களின் குடும்பங்களுக்கு வழங்க உதவியாக இருக்கும் என துணை அமைச்சர் சரஸ்வதி கூறினார்.