பெட்டலிங் ஜெயா, மார்ச் 24 –
பள்ளி ஆசிரியர் ஒருவர் 17 வயது மாணவரோடு, பாலியல் குற்றம் புரிந்துள்ளதாக பெறப்பட்ட புகாரை போலீசார் விசாரித்து வருவதாக செப்பாங் வட்டார போலீஸ் தலைவர் துணை கமிஸ்னர் காமாருல் வான் யூசோப் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் மாதம் பெறப்பட்ட இப்பூகார் தொடர்பாக ஆசிரியர் மாணவர் இரு தரப்பினர் மத்தியிலும் மிக கவனமாக விசாரணாஇ நடத்தப்பட்டு வருவதால் காலம் எடுத்துக்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
17 வயது மாண்வன் நூல் நிலையத்தில் பாடத்தை மீள்பார்வை செய்து கொண்டிருக்கும் பொழுது, 37 வயது ஆசிரியர் பாலியல் குற்றம் புரிந்தார் என்ற புகாரை மாணவரின் 46 வயது தாயர் போலீசாரிடன் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.