பாடு தொடர்பாக சரவாக் எடுத்துள்ள முடிவிற்கு விளக்கம் வேண்டும்- துணை பிரதமர் கோரிக்கை.

கோலாலம்பூர், மார்ச் 24 –

பாடுமக்கள் தரவு தளம் தொடர்பாக சரவாக் மாநிலம் எடுத்துள்ள முடிவு அரசாங்கம் மதிப்பதாகவும், இருந்த போதும் பாடு பதிவைத் தள்ளிபோட எடுத்துள்ள சரவாக் மாநில முடிவிற்கான விளக்கம் தங்களுக்கு வேண்டும் என துணைப் பிரதமர் டத்துக் ஶ்ரீ பட்சிலா யூசோப் கேட்டுக் கொண்டுள்ளார்.

எதிர்வருகின்ற மார்ச் மாதம் 31-ஆம் பாடு தரவு தளத்தில் தகவல்கள் பதிவதற்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில் , இப்பொழுது அதனை சரவாக் தள்ளி போடுவதற்கான காரணம் வேண்டும் என அவர் கூறினார்.

இதற்கு முன்பு பாடு தரவு தளத்தில் சில சிக்கல்கள் இருந்த நிலையில், அது தொடர்பாக சரவாக் மாநிலம் பாடு செயலாக்கப்பிரிவிடம் விளக்கம் கேட்டு கொள்வதாக கூறியிருந்த நிலையில், மீண்டும் அதனை காரணம் காட்டி சரவாம் மாநிலம் பதிவை தள்ளிப் போடுவதற்கான சரியான காரணம் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்