சிலாங்கூர், மார்ச் 22.
நோன்பு பெருநாளை முன்னிட்டு சிலாங்கூரிலுள்ள பொதுச்சேவை ஊழியர்களுக்கு ஒரு மாத போனஸ் அல்லது குறைந்தபட்சமாக ஆயிரம் வெள்ளி வழங்கப்படவிருப்பதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமீருதீன் சாரி அறிவித்துள்ளார்.
45 மில்லியன் வெள்ளியை உட்படுத்திய மஹபாஹ் ரமடான் திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் ஏப்ரல் 8ஆம் தேதி, அந்த உதவி தொகை வழங்கப்படும். சிலாங்கூர் அரசு நிர்வாக கட்டடம் – SUK-க்கில் பணியாற்றும் அனைத்து பொதுச்சேவை ஊழியர்களும் அந்த உதவியைப் பெறுவார்கள் என்று அமீருதீன் சாரி தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, கூட்டரசு அரசாங்கத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் அந்த உதவி தொகை வழங்கப்படுவதுடன் கிராமத் தலைவர்கள் செயலாளர்கள் உட்பட மாநில அரசாங்கம் நியமித்த சமூக தலைவர்களுக்கும் ஒரு மாத ELAUNS வழங்கப்படும் என்றாரவர்.