சிலாங்கூர் மந்திரி பெசார் வீட்டில் அத்துமீறு நுழைவு : விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது

பெட்டாலிங் ஜெயா, ஜன – 8,

சிலாங்குர் மந்திரி பெசார் வீட்டினுள் அத்துமீறி நுழந்த மூவர் தொடர்பான விசாரணை அறிக்கை துணை பப்ளிக் புராசிக்கியூட்டர் அலுவலகத்திற்குத் தாக்கல் செய்யப்பட்டதாக ஷா ஆலாம் போலீஸா தலைவர் முகம்மட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

இவ்விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட மூன்று நபர்களும் இந்த வழக்கு தொடர்பாக எதிர் அறிக்கையை செய்துள்ளர் என்றும் அது “ஒரு மறுப்பு அறிக்கையாக” உள்ளது எனவும் அவர் சொன்னார்.

தங்களைத் தற்காக்கும் வகையில், ஹராக்கா ஊடகம் இன்று ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. உண்மை நிலவரம் எனக் குறிப்பிடப்பட்ட அந்த அறிக்கையில், கிள்ளான், கம்போங் சுங்கை சீரே மக்களின் அழைப்பை ஏற்று Suffi Kamariயும் ஹராக்காவைச் சேர்ந்த மேலும் இரு ஊழியர்களும் அங்கு வந்ததாகவும் உள்ளே நுழைய அனுமதி கொடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்