பொருளாதாரப் பயணத்தைத் தொடங்கிய பெரியார் கூட்டுறவு நிறுவனம்

ஶ்ரீ கோம்பா, ஜன – 8,

பெரியார் கூட்டுறவு நிறுவனம் நேற்று வெற்றிகரமாக தனது பொருளாதாரப் பயணத்தைத் தொடங்கியது.

அக்கூட்டுறவு நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு பங்குப்பத்திரம் வழங்கும் நிகழ்ச்சியை நேற்று அதிகாரப் பூர்வமாகத் தொடக்கி வைத்தப்போது; அதன்தலைவர் முனைவர்- பெரு. அ. தமிழ்மணி மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

பெரியாரின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள முதன்மையான கூட்டுறவு நிறுவனமாக இருப்பதால், அதனுடைய உறுப்பினர்களுக்கு மிகுந்த நம்பிக்கையோடு, அதன் செயல்பாடு இருக்கும் என்று! அவர் தெரிவித்தார்.

நேற்று அதன் உறுப்பினர்களுக்கு பங்குப்பத்திரங்களை வழங்கிய போது; அவருடன் பொருளாதார நிபுணர் இரா.மாசிலாமணியுடன், அக்கூட்டுறவின் தலைமைச் செயலாளர் சி மு விந்தைக் குமரன், துணைச் செயலாளர்- த.பரமசிவம், பொருளாளர் தினகரன்; உள்ளிட்டோருடன் ஒருசில வாரிய இயக்குநர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.

விரைவில் அந்நிறுவனத்தின் ஆண்டுக்கூட்டம் நடைபெறவிருப்பதால், உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டி நாடுமுழுமையும் வட்டார வாரியாக மக்களைச் சந்திக்கிற கூட்டங்களை நடத்திட வேண்டுமென்று இயக்குநர்களைக் கேட்டுக்கொள்வதுடன, இதன்வழி, இந்திய சமூகத்தின் சொத்துடமையை அதிகரிக்க முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்று வாரிய உறுப்பினர்களை தமிழ்மணி கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்