வரும் ஜனவரி 15 ஆம் தேதி திங்கட்கிழமை தைப்பொங்கல் திருநாள் கொண்டாடபப்படுகிறது.
பொங்கல் திருநாளையொட்டி கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம், புடு கோர்ட்டு மலை ஸ்ரீ கணேசர் ஆலயம், பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் ஆகிய மூன்று ஆலயங்களில் பொங்கல் வைக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகங்களும், பூசைகளும் நடைபெறவிருப்பதாக தேவஸ்தானத்தின் தலைமைக் குருக்கள் வேலாயுத பட்டர் சிவகுமார் தெரிவித்தார்.
அத்துடன் பொங்கல் வைப்பதற்காக உகந்த நேரத்தையும் வேலாயுத பட்டர் சிவகுமார் பட்டர் அறிவித்துள்ளார்.