சீனக்கோவில்சிலைகளை சேதப்படுத்தியதாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்

மன்ஜோங், ஏப்ரல் 7 –

மன்ஞோங், கம்பூங் கோ, தோகோங் கில் உள்ள சிலையை சேதப்படுத்திய சம்பவத்தை தொடர்ந்து நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இச்சம்பவம் குறித்து தமது தரப்புக்கு புகார் கிடைக்க பெற்றதாக மன்ஜோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி மொஹாமாட் நோர்டின் அப்துல்லா தெரிவித்தார்.

நபர் ஒருவர் கோவில் சிலையை சேதப்படுத்துவதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகிய காணொளி குறித்து, 56 வயதுடைய பெரியவர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக மொஹாமாட் நோர்டின் கூறினார்.

அப்புகாரை தொடர்ந்து நேற்று இரவு 9.30 மணியளவில் 35 வயதுடைய ஆடவரை தைபிங் கில் குற்றப் புலனா‌ய்வு பிரிவின் மன்ஜோங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் உறுப்பினர்கள் கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

காணொளி எடுக்க பயன்படுத்தப்பட்ட தொலைபேசியையும் அந்நபரிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்ததாக மொஹாமாட் நோர்டின் தெளிவுபடுத்தினார்.

மற்ற சமயத்தை அவமதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக குற்றவியல் சட்டம் 295 பிரிவின் கீழ் அந்நபர் விசாரணை மேற்கொண்டு வருவதாக மொஹாமாட் நோர்டின் மேலும் தகவல் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்