ஷாஹ் அலாம், ஏப்ரல் 03-
வருகின்ற நோன்பு பெருநாளை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பும் பொதுமக்கள், அருகேயுள்ள போலீஸ் நிலையங்களில் பாரங்களை பூர்த்தி செய்து தெரிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அதன் வழி, அக்குடியிருப்பு பகுதிகளில் ரோந்து பணிகளைத் தங்கள் தரப்பு தொடர்ந்து மேற்கொள்வதற்கு அது பேருதவியாக இருக்குமென பகாங் போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ யஹாயா ஒத்மான் வலியுறுத்தினார்.
வெளியே செல்லும் மக்களின் நடமாட்டத்தை உறுதிபடுத்தவும் ரோந்து பணிகளுக்கு போலீஸ் திட்டமிடவும் அந்த தகவல்கள் பெரிதும் உதவும் என்றாரவர்.