2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவின் கீழ் கடந்த ஆண்டு 624 பேர் கைது செய்யப்பட்டனர் என்று உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution தெரிவித்துள்ளார்.
இவர்களில் 71 பேர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். 401 பேர் தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். 140 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 12 பேர் இன்னமும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்று இன்று மக்களவையில் பக்காத்தான் ஹராப்பானின் ரவூப் உறுப்பினர் Chow Yu Hui எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் Saifuddin Nasution இதனை தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 18 க்கும் 69 க்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் என்று அமைச்சர் விளக்கினார்.
வாரண்டுயின்றி ஒருவரை 28 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு வகைசெய்யும் சர்ச்சைக்குரிய சட்டமான சொஸ்மாவின் கீழ் கடந்த ஆண்டு பிடிபட்டவர்களின் எண்ணிக்கை குறித்து Chow Yu Hui மக்களவையில் வினவினார்.