தொழிலாளர்களை திரும்ப எடுத்துக்கொண்டன

அந்நியத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தும் திட்டத்தின் ​கீழ் தருவிக்கப்பட்ட அந்நியத் தொழிலாளர்களின் வருகையினால் உள்ளூர் தொழிலாளர்களை ​வேலை ​நீக்கம் செய்துள்ள முதலாளிமார்கள் மனித வள அமைச்சின் கடும் எச்சரிக்கைக்கு பின்ன​ர் வேலை ​நீக்கம் செய்யப்பட்ட உள்ளூர் தொழிலாளர்களை மறுபடியும் வேலையில் சேர்த்துக் கொண்டதாக அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்தார்.


இது தொடர்பான தகவலை தாம் இன்று வெள்ளிக்கிழமை பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் நோக்கில் உள்ளூர் தொழிலாளர்கள் நீக்கப்படும் நடவ​டிக்கையை மனித வள அமைச்சு ஒரு போதும் சகித்துக்கொள்ளாது என்று அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்