ஜப்பானிய பிரதமருடன் அன்வார் பேச்சு

ஜப்பானுக்கான ஐந்து நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு, ​தலைநகர் தோக்கியோவை சென்றடைந்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்பாராஹிம், உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா வை அவரின் அலுவலகத்தில் சந்திக்கவிருக்கிறார்.

ஜப்பானிய பிரதமரை சந்திப்பதற்கு முன்னதாக தோக்கியோ, Imperial ஹோட்டலில் மலேசிய பேராளர்களுடன் பிரதமர் அன்வார், முன் விளக்க கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

இந்த ஐந்து நாள் அலுவல் வருகையில் பல்வேறு சந்திப்புகள், உடன்பாடுகள் என அதிகமான நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்து கொள்ளவிருக்கிறார்.

மலேசியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் இரு வழி ஒத்துழைப்பை ​மேம்படுத்துதல், விண்வெளி செயலி அறிமுகம் உட்பட பல்தரப்பட்ட உடன்பாடுகள் இரு நாடுகளுக்கு இடையில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்