ஜெய்ன் ரய்யான் வழக்கு தொடர்பில் காவல் துறை விசாரணை நடத்த பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சொந்த ஊகங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதால், அது காவல் துறையின் விசாரணைக்கு இடையூறாக இருந்து வருவதாக சிலாங்கூர் மாநிலக் காவல் துறைத் தலைவர் ஹுசைன் உமர் கான் தெரிவித்தார்.
சமூக ஊடகப் பதிவால் பாதிக்கப்பட்டக் குடும்பத்தாருக்கு உளவியல் நிலையில் ததொந்தரவையும் ஏற்படுத்தும். எனவே, சமூக ஊடகப் பயனர்களின் சொந்த ஊகங்களைப் பகிர வேண்டாம் என ஹுசைன் உமர் கான் கேட்டுக் கொண்டார்.