பெர்ணம் ஜெயாவில் 2,300 மலிவு விலை வீடுகள்

Kumpulan Hartanah Selangor Berhad KHSBஇன் கீழ் உலு சிலாங்கூரில் உள்ள பெர்ணம் ஜெயாவில் 2,300 மலிவு விலை வீடுகள் கட்டப்பட உள்ளது.

இதனால், அந்தப் பகுதியில் பொருளாதாரம் வளம் பெறும் எனவும், அந்தத் திட்டம் அடுத்த ஆண்டு தொடங்கப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுவதாக சிலாங்கூர் மாநில முதல்வர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

191 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு மாடி வீடு கட்டப்பட உள்ளது. இதனால் அதிக வணிக வாய்ப்பும் வேலை வாய்ப்புகளும் அங்கு உறுவாக்கும் என அவர் மேலும் சொன்னார்.

“பெர்ணம் ஜெயாவுக்கு அடுத்ததாக புரோட்டான் சிட்டியில் நிர்மாணிப்பது சிலாங்கூர் மக்களுக்கு நன்மை பயக்கும் என்று தம் நம்புவதாக அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

அதே சமயம், தனியார் மேம்பாட்டு நிறுவனங்களுடன் இணைந்து டெவலப்பர்களுடன் இணைந்து பெட்டாலிங் ஜெயாவில் 2,000 வணிக அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாக்கப்படும் என Kumpulan Hartanah Selangor Berhadடின் தலைமை நிர்வாக அதிகாரி ரஹானா அப்துல்லா கூறினார்.

2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மூன்று கட்டடங்களை உள்ளடக்கிய அந்தத் திட்டம் எட்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்