தரவுகள் விற்பனை – ஆடவர் கைது

கோலாலம்பூர், ஜன – 4,

அரசாங்க ஏஜென்சிக்கு சொந்தமான தனிபர்களின் தரவுகள் தளத்தில் ஊடுருவி , அந்த தரவுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் பிடிபட்டுள்ளார்.

24 வயதுடைய அந்த நபர் கடந்த டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று கோலாலம்பூரில் பிடிபட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றப்பிரிவு போலீஸ் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது யூசுப் தெரிவித்துள்ளார்.

பிடிபட்ட உள்ளூர் ஆடவர் ஒவ்வொரு ஜோடி தரவுகளையும் விற்பனை செய்வதற்கு தலா 200 டாலரை பெற்று இருப்பது விசாரனையில் தெரியவந்துள்ளதாக முகமட் யூசுப் இன்று புக்கிட் அமான் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இதனை குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்