டாக்டர் அக்மால் சாலேஹ் தடுத்துவைக்கப்பட்டார்

கோத்தா கினபாலு, ஏப்ரல் 05-

அல்லாஹ் சொல் கொண்ட காலுறையை விற்பனை செய்திருந்த KK மார்ட் நிறுவனத்தை புறக்கணிக்கும் பரப்புரையை மேற்கொண்டு வந்த உம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மால் சாலேஹ், இன்று காலையில் கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார். அந்த தகவலை முகநூல் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

டங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நாளை விளக்கமளிக்கவிருந்த நிலையில், இன்று தாம் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் போலீசிடம் முழு ஒத்துழைப்பை வழங்கப் போவதாகவும் டாக்டர் அக்மால் சாலேஹ் கூறினார்.

தமக்கு என்ன நேர்ந்தாலும், தமது நிலைப்பாட்டை ஒரு போதும் மாற்றிக்கொள்ள போவதில்லை என்றாரவர்.

சபாவில் உம்னோ இளைஞர் பிரிவின் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக டாக்டர் அக்மால் சாலேஹ் அங்கு சென்றிருந்ததாக கூறப்படுகின்றது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்