டாக்டர் தேவகி கிருஷ்ணனுக்கு இறுதி மரியாதை

பொதுச் சேவைத் துறையில் பதவி வகித்த முதல் இந்தியப் பெண்மணியும் மூத்த அரசியக்வாதியுமான தான் ஶ்ரீ டாக்டர் தேவகி கிருஷ்ணன் அவர்கள் ஜனவரி 20 ஆம் நாள் சனிக்கிழமை இரவு 8.00 மணி அளவில் தமது 100வது வயதில் இறைவனடி சேர்ந்து விட்டார்.

அன்னாரின் நல்லுடல் ஜனவை 23 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிக்குள் பிருந்தாவன், எண். 118, ஜாலான் பெர்ஹாலா, பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு கோலாலம்பூர், லோக் இயூவில் உள்ள சிலோன் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்ப்பட உள்ளது.

அன்னாரின் நல்லுடலுக்கு இறுதி மரியாதை செலுத்த ஜனவரி 22 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும்,
ஜனவரி 23 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி முதல் காலை 11.00 மணி வரையிலும் வருகை புரியலாம் என அவரின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்