பெட்டாலிங் ஜெயா, மார்ச் 4 –
முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினின் மருமகன் Muhammad Adlan Berhan- னை கைது செய்வது தொடர்பில் அனைத்துலக போலீஸ் துறையான இந்தர்போல் லிடம் கூடுதல் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசென் தெரிவித்துள்ளார்.
முகைதீனின் மருமகளின் பெயரை சிறப்பு அறிக்கையில் இடம் பெற செய்வது தொடர்பில் Interpol- லின் பதிலுக்காக அரச மலேசிய போலீஸ் படை காத்திருப்பதாக. தான் ஶ்ரீ ரசாருடின் குறிப்பிட்டார்.
முகைதீனின் மருமகன் தொடர்பில் என்னென்ன கூடுதல் தகவல்கள் தேவை என்பதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான ஸ்.பி.ர்.ம் மிடமிருந்து போலீஸ் துறை பெற்று விட்டதாக அவர் குறிப்பட்டார்.
கூடுதல் தகவல் தொடர்பில் , கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி இந்தர்போல் மலேசிய போலீஸ் துறையை தொடர்பு கொண்டு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிதி முறைகேடு மற்றும் லஞ்ச ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் முகைதீன் மருகன் தற்போது தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்.