டீசல் கப்பலின் கேப்டனுக்கு 18 மாதம் சிறை

42,000 வெள்ளி மதிப்பிலான 7,000 லீட்டர் டீசலை மோசடி செய்த குற்றத்தை ஒப்பு கொண்ட டீசல் கப்பலின் கேப்டனுக்கு 18 மாதம் சிறைத்தண்டனை செஷன் நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்டது.

60 வயதுடைய ஜஸ்முன் சுஹுச் குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து நீதிபதி நூர் ஹஃபிஸா முகம்மட் சலிம் முன் குற்றம் வாசிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் கோத்தா கினாபாலு, ERB West, Express 71 கப்பலில் பெட்ரோலியம் நேஷனல் பெர்ஹாட் நிறுவனத்திற்கு சொந்தமான 7,000 லீட்டர் டீசலை மோசடி செய்ததாக அந்நபர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

குற்றம் என்று நிரூபிக்கபட்டால் குற்றவியல் சட்டம் 408 பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட நபர் ஒன்று முதல் 14 ஆண்டுக்காலம் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் வழங்கப்படும் என்று அறியப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்