கோலாலம்பூர், மார்ச் 21 –
இம்மாதம் முற்பகுதியில் கோலாலம்பூர், செந்தூல், கம்பூங் பாடாங் பாலாங் கில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக விளங்கும் மாது ஒருவரின் பங்களா வீட்டில் நுழைந்து 21 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள தங்கப்பாலங்கள் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்ற சம்பவத்தில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 க்கும் 36 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நால்வரும் கடந்த மார்ச் 5 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் கொள்ளையடிக்கப்பட்ட தங்கப்பாலங்களும், தங்க ஆபரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்துக் அலாவுடின் அப்துல் மாஜிட் தெரிவித்துள்ளார்.
பிடிபட்ட கும்பல், சிலாங்கூர், கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் வர்த்தகர்கள் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்களின் வீடுகளை இலக்காக கொண்டு கொள்ளையடித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக டத்துக் அலாவுடின் குறிப்பிட்டார்.