5 லட்சம் வெள்ளியை பாதுகாப்பாக ஒப்படைத்தார்

கோலாலம்பூர், மார்ச் 21 –

கடந்த புதன்கிழமை டாமன்சாராவில் உள்ள பேரங்காடி மையம் ஒன்றில் கார் நிறுத்தும் இடத்தில் கண்டு பிடிக்கப்பட்ட 5 லட்சம் வெள்ளி ரொக்கப்பணத்தை உள்ளடக்கிய பயணப்பெட்டி ஒன்றை பாதுகாப்பாக போலீசாரிடம் ஒப்படைத்த நேர்மையான பாதுகாவலர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பரவலாக பாராட்டப்பட்டு வருகிறார்.

தம்மால் கண்டு பிடிக்கப்பட்ட அந்த பணத்தை உரியவரிடம் சேர்க்கப்பட வேண்டும் என்று அந்த பாதுகாவலர் எடுத்துக்கொண்ட முயற்சி மற்றும் உறுதிபாடு தங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக அந்த செய்தியை படித்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பேரங்காடி மையத்தை தொடர்பு கொண்ட போது, கருத்துரைக்க மறுத்து விட்டது. இந்த விவகாரத்தை போலீசாரிடமே விட்டு விடுவதாக குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் நிலையம் ஒரு புகாரை பெற்று இருப்பதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்துக் ஹூசேன் ஓமார் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்