தங்க இரதம் காலை 5. 30 மணிக்கு புறப்படும்

2024 ஆம் ஆண்டுக்கான பினாங்கு தைப்பூச விழாவையொட்டி தங்க இரதம், வரும் ஜனவரி 24 ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு பினாங்கு Queen Street- டில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலிருந்து தண்​ணீர்மலை, அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தை நோக்கி புறப்படும் என்று அவ்வாலயத்தின் தலைவர் நரேஷ் தெரிவித்தார்.

தங்க இரதம் புறப்படுவதற்கு ஏதுவாக முதன்மை சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும் என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் RSN ராயர் மற்றும் துணைத் தலைவர் ​டாக்டர் லிங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தங்க இரதப் புறப்பாடு மற்றும் இதர தைப்​பூச ஏற்பாடுகள் குறித்து நரேஷ் விவரித்தார்.

சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பினாங்கு தைப்பூச விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் இரதப்புறப்பாடு தினமான ஜனவரி 24 ஆம் தேதி, பிரதான சாலைகள் மூடப்படுவதை போக்குவர​த்து போ​லீசார், இரண்டு பிரிவுகளாக பிரித்துள்ளனர் என்று நரேஷ் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்