தண்டனையை குறைத்து தருமாறு வலியுறுத்தும் ஆடவர்

பாது பாஹாட், ஏப்ரல் 7 –

போதைப்பொருள் உட்கொண்டு, வீட்டை உடைத்து நுழைந்ததற்காக ஆடவர் ஒருவருக்கு பாது பாஹாட் , மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 12 மாத சிறைத்தண்டனை வழங்க இன்று தீர்ப்பளித்துள்ளது.

மஜிஸ்தீரேட் சுஹைலா ஷாபிஉடின் i முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது 36 வயதுடைய லிம் சின் லோங் குற்றத்தை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் 20 ஆம் தேதி மதியம் 2 மணியளவில் செங்காராங், பாரிட் கெமாங்கில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டினுள் நுழைந்து தொலைக்காட்சியை திருடியதாக அந்நபர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் 411 பிரிவின் கீழ் அந்நபர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்