ஜோகூர் பாரு, ஏப்ரல் 7 –
ஜோகூர் பாரு, தாமான் புக்கிட் இன்டா பெட்ரோனாஸ்சில் நிகழ்ந்த சண்டை தொடர்பாக வைரலாகிய காணொளி குறித்து போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
சந்தேகிக்கும் 35 வயதுடைய ஆடவரை நேற்று பிற்பகல் 12 மணியளவில் லெபூராயா கோத்தா இஸ்கன்டார் Lebuhraya ரில் வளைத்து பிடிக்கப்பட்டதாக இஸ்கன்டார் புத்ரி மாவட்ட காவல்துறையின் செயல்பாட்டு தலைவர் சுப்ரின்டென்டன் இப்ராஹிம் மாட் சோம் தெரிவித்தார்.
தனது தோழியின் கணவரால் தாம் அடித்து தாக்கப்பட்டதாக 26 வயதுடைய ஆடவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததை தொடர்ந்து அந்நபர் கைது செய்யபட்டதாக இப்ராஹிம் மாட் கூறினார்.
பொறாமையின் காரணமாக அந்நபர் பாதிக்கப்பட்டவரை தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக இப்ராஹிம் மாட் ஓர் அறிக்கையில் இன்று வெளியிட்டார்.