ஜோர்ஜ் டவுன், ஜன – 5,
பினாங்கு மாநிலத்தில் தண்ணீர் விநிரோகத் தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் இல்லிருப்புக் கல்வி முறை பயன்படுத்தப்பட பினாங்கு மாநிலக் கல்வி இலாகா அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் ஜனவரி 10 முதல் நான்கு நாட்களுக்கு இந்த முறையில் கற்றல் கற்பித்த நடக்க திட்டமிடப்பட்டுள்ளது என பினாங்கு மாநிலக் கல்வித் துணை இயக்குநர் Wan Sajiri Wan Hassan தெரிவித்தார்.
இருப்பினும், அரசாங்கத் தேர்வு நடப்பதால், படிவம் 5. படிவம் 6 மாணவர்கள் அட்டவணைப்படி பள்ளிக்கு வரலாம் என அவர் மேலும் சொன்னார்.
இது குறித்து மிக விரைவில் கல்வி இலாகாவின் கடிதம் பள்ளிகளை வந்தடையும் என்றார் அவர்.