தனியார் கிளினிக் மீது விசாரணை மேற்கொள்ளப்படுவதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தகவல்

கோலாலம்பூர், ஏப்ரல் 09-

நாட்டிலுள்ள பிரபல தனியார் கிளினிக் ஒன்று அதன் பணியாளருக்கு மாத சம்பளத்தை செலுத்தவில்லை என சமூக ஊடகத்தில் காணொலி ஒன்று பரவலாகி வருகின்றது.

அவ்விவகாரம் குறித்து ஆட்பலத்துறை விசாரணையை மேற்கொண்டு வருவதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம், அவரது X பதிவில் உறுதிபடுத்தினார்.

அந்த காணொலியில், தனது முதலாளி கடந்த மாத சம்பளத்தை வழங்கவில்லை என பாதிக்கப்பட்ட பணியாளர் கூறியிருந்தார்.

சம்பளத்தில் ஊழியர் சேமநிதி வாரியம்- இ.பி.எப்-க்கான கட்டணமும் சமூக பாதுகாப்பு நிறுவனத்திற்கான கட்டணமும் பிடித்தம் செய்யப்பட்டிருந்தாலும், அவை அவ்விரு நிறுவனங்களில் செலுத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்