தப்பி ஓடிய நால்வர் – பெண் கைது, மூவர் தேடப்படுகிறார்கள்

ரெம்பாவ், ஜன – 8,

ரெம்பாவ், கம்போங் ரெலோங்கில் இல் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது காவல் துறையின் ரோந்து பிரிவிடம் இருந்து மூவர் தப்பி ஓடிய நிலையில், பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகிக்கும் வகையில் புரோட்டோன் வீரா வகை காரின் செயல்பாடுகள் இருந்த நிலையில், அதனை நிறுத்த போலீஸ் முற்பட்டது. அவர்களிடம் சிக்காமல் தப்பிக்க கார் வேகமாக செலுத்தப்பட்டது, அந்தக் கார் இறுதியில் வழி யில்லாத முட்டுச் சந்தை அடைந்தது. தப்பிக்க வழி இல்லாத நிலையில், வந்த வழியிலேயே தப்பிக்கும்போது, போலீஸ் வாகனத்தை மோதித் தள்ளியது.

பாதையில் இடது புறத்தில் விழுந்த அந்த புரோட்டோன் வீரா காரில் இருந்து மூவர் தப்பித்த நிலையில், ஒரு பெண் மட்டும் கைது செய்யப்பட்டார் என ரெம்பாவ் போலீஸ் தலைவர் ஹஸ்ரி முகம்மட் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அந்த பெண்மணியின் வயது 31 எனவும் தேடப்பட்டு வரும் மூவரில் இருவருக்கு முறையே 26 மற்றும் 31 வயது எனத் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்