கோலாலம்பூர், ஜன – 8,
வியாபாரி ஒருவர் போலி பிராண்ட் முத்திரை கொண்ட 65 கைப்பைகளை வைத்திருந்த குற்றத்திற்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவருக்கு 32 ஆயிரத்து 500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு 31 வயது ஜென்னி சென் இக்குற்றத்தைப் புரிந்ததால் நீதிபதி னோரினா ஸைனால் அபிடின் அவ்வாறு தீர்ப்பளித்தார். அபராத்தத்தைச் செலுத்தத் தவறினால், 6 மாதங்கள் சிறை தண்டனையை அந்தப் பெண்மணி அனுபவிக்க வேண்டும்.