முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்

சிரம்பான், ஜன – 4,

முதியவர் ஒருவர் முதுகில் கடுமையாக வெட்டுக்காயங்களுடன் ஒரு வீட்டில் இறந்து கிடந்தது இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அரிபாய் தாராவே தெரிவித்துள்ளார்.

74 வயது மதிக்கத்தக்க அந்த முதியவர் காலை 10.10 மணியளவில் போர்ட்டிக்சன், ரந்தாவ், கம்போங் பாசிர் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது குறித்து பெறப்பட்ட தகவலைத் தொடர்ந்து அந்த முதியவரின் சடலம் மீட்கப்பட்டு, சவப்பரிசோனைக்காக சிரம்பான், துவாங்கு ஜாஃபார் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டதாக ஏசிபி அரிபாய் தாராவே குறிப்பிட்டார்.

இக்கொலை தொடர்பில் 18, 25 வயதுடைய இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளதாக அவர் மேலும் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்