குவாந்தான், மார்ச் 31 –
தாம் பேசியதை தவறாக சித்தரித்த செய்தி அறிக்கைக்குப் பகாங் சுல்தான் கடும் கண்டனம் தெரிவித்தார்
சுல்தான், இந்த அறிக்கையை அவதூறாக கருதுவதாகவும், நல்லிணக்கத்தை தூண்டக்கூடிய எதிர்மறையான தாக்கங்களை கொண்டிருப்பதாகவும் பகாங் அரண்மனையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக அவர் சாடினார்.
மாரான், Chenor Agricultural Academy யில் சுல்தான் ஆற்றிய உரையும் செய்தி இணையத்தளத்தில் வெளிவந்த தகவலும் மாறுபட்டவையே என்று அவரின் Royal Highness அறிவித்தார்.
சுல்தானின் கருத்துக்கள் யாவையும் அரசியல் கட்சிகளை குறிவைக்கவில்லை என்பதுடன் அவை பொதுவான கூற்றாகும்.
அது பள்ளிவாசலின் புனிதத்தை எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை நினைவூட்டுவதாக இருந்ததாகும் என்று அவர் விளக்கினார்.
சுல்தான் அப்துல்லா, ஊடக பயிற்சியாளர்களுக்கு செய்தி அறிக்கையை சரிபார்த்து, உத்தேசித்துள்ள செய்தியிலிருந்து விலகியிருக்கும் விளக்கங்களுக்கு எதிராக பாதுகாக்குமாறு நினைவுப்படுத்தியதாக சஹாரியா யாஹ்யா தெரிவித்தார்.
பத்திரிக்கை நெறிமுறைகளை எல்லா நேரங்களிலும் கடைபிடிக்கபட வேண்டும் என்று சஹாரி யாஹ்யா மேலும் வலியுறுத்தினார்.