நாடாளுமன்ற மக்களவைக் கூட்டம் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்குகிறது. இக்கூட்டத் தொடரில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் திட்டம் கொண்டுள்ளனவா ? என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை என்ற போதிலும் அது தொடர்பாக இதுவரையில் எந்தவொரு தீர்மானத்தையும் தாங்கள் பெறவில்லை என்று மக்களவை சபா நாயகர் Tan Sri Johari Abdul தெரிவித்துள்ளார்.
இது போன்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வர வேண்டுமானால், வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி நாடாளுமன்றக்கூட்டம் தொடங்குவதற்கு 14 நாட்களுக்கு முன்னதாகவே தீர்மானத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இதுவரையில் அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்று Johari Abdul குறிப்பிட்டார்.
தீர்மானத்தை கொண்டு வருவது ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரின் உரிமையாகும். ஆனால், அந்த தீர்மானத்தை அவைக்கு கொண்டு வருவதா? இல்லை? என்பது தொடர்பில் அதன் உள்ளடக்கத்தை தமது அலுவலகம் முதலில் ஆராயும் என்று சபா நாயகர் Johari Abdul தெளிவுபடுத்தினார்.