தாயை ஸ்டீயரிங் வீலால் தாக்கிய நபர் கைது

கோலாலம்பூர் ,பிப்ரவரி 22 –

36 வயதுடைய ஆடவர் ஒருவர் தனது தாயாரை ஸ்டீயரிங் வீலால் அடித்து படுங்காயங்களுக்கு ஆளாக்கிய குற்றத்திற்காக போலீசார் கைது செய்தனர்.

அந்நபர் தனது அறைக்கு செல்ல முற்பட்ட போது கதவின் முன் இடையூறு விளைவிக்கும் வகையில் காலணி அலமாரி இருந்ததாகவும் ஆத்திரமடைந்து உறங்கி கொண்டிருந்த தாயை அடித்ததாகவும் தெரியவந்துள்ளது.

இன்று நள்ளிரவு 12:30 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 74 வயதுடைய மூதாட்டியை பற்கள் உடைந்து, தலையில் படுங்காயம் ஏற்பட்டிருக்கும் நிலையில் காணப்பட்டதாக அம்பாங் ஜெயா போலீஸ் தலைவர்ஆசம் இஸ்மாயில் கூறினார்.

இச்சம்பவத்தின் போது அந்நபரின் 30 வயதுடைய சகோதரர் தனது அண்ணனை சமாதானப்படுத்த முன்வந்த வேளையில் அவருக்கும் காயம் ஏற்பட்டிருப்பதாக ஓர் அறிக்கையில் ஆசம் இஸ்மாயில் விளக்கினார்.

இதுக்குறித்து அந்நபர் கைது செய்யப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி வரையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றவியல் சட்டம் 326 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆசம் இஸ்மாயில் அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்