பிரதமர் அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்தை வீழ்த்தும் நடவடிக்கையாகக் கூறப்படும் துபாய் நகர்வு குறித்து காவல் துறை விசாரணை செய்ய வேண்டும் என பிரதமரின் அரசியல் செயலாளர் சம்சுல் இஸ்கண்டார் முகம்மட் அகின் புகார் அளித்துள்ளார்.
மக்களிடையே பரபரப்பையும் முதலீட்டாற்களிடையே தயக்கத்தை ஏற்படும் அந்த விவகாரம் உடனடியாக ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட இந்தப் புகாரை அளித்திருப்பதாக சம்சுல் இஸ்கண்டார் கூறினார்.
அண்மையில் ராஜா பெட்ரா கமருடினின் தகவலின் அடிப்படையில் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் தீவிட முயற்சி நடந்து வருவதை உறுதிப்படுத்தினாலும், அது வீண் முயற்சியாகி விடும் எனவும் சம்சுல் இஸ்கண்டார் சொன்னார்,
இந்த விவகாரம் குறித்து நாடு முழுவதும் 12 காவல் நிலையங்களில் பிகேஆர் கட்சியின் இளைஞர் அணி புகார்கள் அளித்துள்ளன.