திருட்டு கும்பலை சேர்ந்த மற்றொருவர் பிடிப்பட்டார்

கோத்தா கினாபாலு, பிப்ரவரி 22 –

கோத்தா கினாபாலுவில் வீட்டினுள் புகுந்து கொள்ளையிட்ட பிறகு காவல் அதிகாரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக தங்கும் விடுதியில் பதுங்கி வந்த திருட்டு கும்பலை சேர்ந்த மற்றொருவர் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டார்.

‘ அகுட்’ என்று அடையாளம் காணப்படும் 38 வயதுடைய சந்தேகிக்கும் நபர் நேற்று இரவு 8:10 மணியளவில் சடோங் ஜெயா, ஜாலான் டெலிமா – வில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் சபா, ஜே.எஸ்.ஜே காவல்படை தலைமையகத்தின் போலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக சபா, குற்றப்புலனாய்வு துறையின் தலைவர் ஏசிபி அஸ்மி அப்துல் ராஹிம்தெரிவித்தார்.

சபா, ஜேஸ்ஜே -வின் உளவுத்துறை மற்றும் செயல்பாட்டு துறையின் நடவடிக்கைகளின் கீழ் சந்தேகிக்கும் நபர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த வேளையில் கைது செய்யப்பட்டிருப்பதாக அஸ்மி அப்துல் ராஹிம் கூறினார்.

விசாரணையின் போது அந்நபரின் பை, வாடகை காரில் இருந்த கேமரா, காலணிகள், முகமூடி, காரின் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் இன்று குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தில் மேலும் 3 நபர்கள் தேடப்பட்டு வருவதாகவும் கைது செய்யப்பட்ட ஆடவர் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அஸ்மி அப்துல் ராஹிம் அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்