தீக்காயங்களுக்கு ஆளாகிய கணவன் உயிரிழந்தார்

ஈப்போ, மார்ச் 1 –

ஈப்போ, பெர்ச்சாம் ,தாமான் உத்தாமா வில் உள்ள ஒரு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் தீப்பற்றிக்கொண்டதில் கடும் தீக்காயங்களுக்கு ஆளாகிய தம்பதியர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பத்தின் போது 90 சதவீதம் தீக்காயங்களுக்கு ஆளாகிய 64 வயதுடைய முதியவர் நேற்று மாலை 6:52 மணியளவில் மருத்துவமனையில் உயிரிழந்ததாக பேராக் போலீஸ் தலைவர் டத்துக் ஶ்ரீ மொஹமட் யுஸ்ரி ஹாசான் பஸ்ரி தெரிவித்தார்.

அதே வேளையில் தீயில் 70 சதவீதம் பாதிக்கப்பட்ட 57 வயதுடைய மூதாட்டி இன்னும் சுயநினைவின்றி இருப்பதுடனும் ராஜா பெர்மாய்சூரி பைனூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மொஹமட் யுஸ்ரி கூறினார்.

இந்த விசாரணை தொடர்பாக நான்கு சாட்சியங்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட அந்த வயோதிகர் சுயநினைவு திரும்பும் வரையில் காத்திருக்க வேண்டும் என்று மொஹமட் யுஸ்ரி அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்