தம்மை “குட்டி” என்று அழைத்து சிறுமைப்படுத்தி விட்டதாக கூறி, முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடிக்கு எதிராக தொடுத்துள்ள அவதூறு வழக்கு, வரும் ஜுலை 19 ஆம் தேதி முழு விசாரணைக்கு வருகிறது.
இந்த அவதூறு வழக்கின் பூர்வாங்க விசாரணை, இன்று பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. எனினும் 98 வயதான துன் மகாதீர், தேசிய இருதய சிகிச்சை கழகமான IJN- னில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணைக்கான புதிய தேதியை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
துன் மகாதீர் ஒரு மலாய்க்காரர் அல்லது ஓர் இஸ்லாமியர் வழித்தோன்றல் அல்ல என்றும்,/ அவர் இந்தியா, கேரளா வம்சாவளியினர் என்றும்/ மகாதீரின் உண்மையான பெயர் மகாதீர் த/பெ Islandar Kutty என்றும் / அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட், நாட்டின் துணைப்பிரதமராக 2017 ஆம் ஆண்டு பதவி வகித்த போது, அடையாள ஆவணத்துடன் பொதுவில் அம்பலப்படுத்தப்படுத்திய சம்பவத்தை தொடர்ந்து அவருக்கு எதிராக துன் மகாதீர் இந்த அவதூறு வழக்கை தொடுத்துள்ளார்.