மலேசியாவில் உள்ள இந்தியர்கள் தங்களின் தாய்நாட்டிற்கு விசுவாசமாக இல்லை என்று கூறியிருக்கும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிற்கு எதிராக 50 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக கோலசிலாங்கூர் PKR கட்சித் தலைவர் தீபன் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
துன் மகாதீருக்கு எதிரான பெரும்பாலான புகார்கள் PKR கட்சியின் இளைஞர் பிரிவான Angakatan Muda Keadilan செய்துள்ளதாக அவர் குறிப்பட்டார். இந்த புகார்கள் யாவும் கோலாலம்பூர் Travers போலீஸ் நிலையத்தில் இன்று செய்யப்பட்டுள்ளதாக தீபன் குறிப்பிட்டார்.