துப்பாக்கிச் சூட்டு நடத்தியவரின் தடுப்புக்காவல் மேலும் நீட்டிக்கப்பட்டது

கோத்தா பாரு, ஏப்ரல் 22-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் KLIA-வில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடத்திய 38 வயது ஹபிசுல் ஹவாரி-யின் தடுப்புக்காவல் மேலும் 5 நாட்களுக்கு நீடிக்க கோத்தா பாரு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி, கிளாந்தான், கோத்தா பாரு-வில் கைது செய்யப்பட்டிருந்த அவ்வாடவர், இதற்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த 7 நாட்கள் தடுப்புகாவலின் உத்தரவு இன்றுடன் முடிவடைகின்றது.

இந்நிலையில், அவருக்கு எதிரான விசாரணையைத் தொடரும் நோக்கில், போலீஸ் செய்திருந்த கோரிக்கையை ஏற்று மாஜிஸ்ட்ரேட் அஹ்மத் சியாபிக் அய்சாத் நஸ்ரி, நாளை செவ்வாய்க்கிழமை தொடங்கி ஐந்து நாட்களுக்கு தடுப்புகாவலில் நீட்டிக்க கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்