கோலாலம்பூர், மே 15 –
மே மாதம் முதல் வரும் செப்டம்பர் மாதம் வரையில் தென்மேற்கு பருவக் காற்று வீசத் தொடங்கியிருப்பதால் மலேசிய போதுமான மழை அளவை எதிர்பார்க்க முடியும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
இத்தகவலை மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட் மலேசியா அறிவித்து இருப்பதாக அவர் குறிப்பட்டார். இக்காலகட்டத்தில் ஈரப்பதம் நிறைந்த சீதோஷ்ண நிலை நிலவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.