கெடா, மார்ச் 28-
தேங்காயை அறைத்து, பாலைத் தருவிக்கும் இயந்திரத்தில் கை சிக்கிக்கொண்டதில், 18 வயது இளம் பெண் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக வலியால் துடித்துடித்து போனார்.
கெடா, பெண்டாங், கம்போங் பாடாங் டுரியான்-னிலுள்ள அவரது வீட்டில் நேற்றிரவு 9.11 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
தகவல் கிடைக்கப் பெற்றதை அடுத்து, அப்பெண்ணின் வீட்டிற்கு விரைந்த Pendang தீயணைப்பு மீட்பு படையினர் பிரத்தியேக உபகரணங்களைக் கொண்டு அவரின் கையை அந்த இயந்திரத்திலிருந்து வெற்றிகரமாக வெளியாக்கினர்.
பின்னர், அப்பெண் மேல் சிகிச்சைக்காக அலோர் செத்தார்-ரிலுள்ள சுல்தானாஹ் பாஹியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.