வீடு உடைக்கப்பட்டு, துப்பாக்கி உட்பட 200 தோட்டாக்கள் காணவில்லை

தம்பின், மார்ச் 28-

தம்பின், கம்போங் அயெர் குனிங் செலாத்தான்-னில் ரப்பர் தொழிலாளி ஒருவரின் வீடு உடைக்கப்பட்டதில் அவரின் துப்பாக்கி உட்பட வெடிமருந்துகள் காணாமல் போனதாக புகார் பெறப்பட்டதாக தெரியவந்துள்ளது.

நேற்று இரவு 9:51 மணியளவில் 12 bore துப்பாக்கி மற்றும் 200 தோட்டாக்கள் காணாமல் போனதாக புகார் கிடைத்திருப்பதாக தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் அமிருட்டின் சரிமான் கூறினார்.

பாதிக்கப்பட்ட 60 வயதுடைய முதியவர் வீட்டில் இல்லாத சமயத்தில் பிற்பகல் 2.30 மணியிலிருந்து இரவு 8 மணிக்குள் இச்சம்பவம் நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக அமிருட்டின் சரிமான் இன்று ஓர் அறிக்கையில் அறிவித்தார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 457 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாரு அமிருட்டின் சரிமான் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்