தொப்புள் கொடியுடன் கண்டெடுக்கப்பட்ட குழந்தை

ஜோகூர் பாரு, மார்ச் 19 –

ஜொகூர் பாரு, தாமான் டாயா, ஜாலான் சாகு வில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 11 ஆம் தேதி அம்மாடியில் குடியிருக்கும் குடியிருப்புவாசிகள் அக்குழந்தையை கண்டறிந்ததுடன் இதுக்குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்ததாக ஜொகூர் பாரு, மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்தென் கொமிசியோனர் ரௌப் செலாமாட் தெரிவித்தார்.

அக்குழந்தை தொப்புள் கொடி அகற்றாமல் இரத்தத்துடன் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து அக்குடியிருப்புவாசிகள் காவல்துறை மற்றும் மலேசிய சுகாதார அமைச்சகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததாக Raub Selamat கூறினார்.

பின் பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சீராக இருப்பதை உறுதி செய்த ரௌப் செலாமாட் இதுக்குறித்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலும் அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்