தொழிற்கல்லூரி மாணவனை அடித்து கொன்றதற்காக 13 நபர்கள் மீது குற்றச்சாட்டு

லாஹாட் டத்து, ஏப்ரல் 02 –

17 வயதுடைய தொழிற்கல்லூரி மாணவனை கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சக கல்லூரி மாணவர்களான 13 பேர் சபா, லாஹாட் டத்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டனர்.

16 முதல் 19 வயதிற்கு உட்பட்ட அந்நபர்கள் கடந்த மார்ச் 21 ஆம் தேதி இரவு 9 மணி முதல் மறுநாள் மார்ச் 22 ஆம் தேதி காலை 7.38 மணி வரையில் லாஹாட் டத்து வொகேஷனல் காலேஜ், 7 ரெசாக் மற்றும் 5 பெலியான் -னில் உள்ள அறையில் இக்குற்றத்தை புரிந்திருப்பதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படுவதால் குற்றச்சாட்டப்பட்டிருக்கும் நபர்களிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பெறவில்லை என்று தெரியவந்துள்ளது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது கூடியபட்சம் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றச்சாட்டப்படுவார்கள் என்று கூறப்படுகின்றது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்