முதியவரின் உடல் கடைக்கு பின்னால் கண்டெடுக்கப்பட்டது

ஜொகூர் பாரு, ஏப்ரல் 02 –

ஜொகூர் பாரு, ஜாலான் செராம்ப்பாங் -கில் உள்ள கடைகளுக்குப் பின்னால் 67 வயதுடைய முதியவர் ஒருவர் சுயநினைவின்றி உயிரிழந்து இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தான் சியூவ் லியாங்-கிற்கு எதிராக எந்தவொரு குற்றச்செயலும் பதிவாகவில்லை என்று ஜொகூர் பாரு போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் ரவூப் செலமாட் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட முதியவரை கொலை புரிந்த சம்பவத்திற்கான எந்தவொரு அறிகுறிகளும் இல்லாத நிலையில் இது ஒரு திடீர் மரணமே என்று சவப் பரிசோதனையின் வாயிலாக கண்டறியப்பட்டதாக ரவூப் செலமாட் கூறினார்.

அந்த முதியவரின் உடல் கண்டெடுக்கப்படுவதற்கு முன்பாக கடந்த ஐந்து நாட்களாக அவர் அவ்வளாகத்தில் சுற்றி வந்ததாக தெரியவந்துள்ளது.

நேற்று பிற்பகல் 2.40 மணியளவில் கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் அவ்விடத்திற்கு சென்றதாகவும் மேல் நடவடிக்கைகளுக்காக அம்முதியவரின் உடல் சுல்தானாஹ் அமிநாஹ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ரவூப் செலமாட் மேலும் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்