தொழிற்சாலை பேருந்து மோதி, மண்வாரி இயந்திர ஓட்டுநர் பலி

பாலிங், மார்ச் 29-

தொழிற்சாலை பேருந்து மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மண்வாரி இயந்திரத்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நேற்றிரவு மணி 8.19 அளவில் கெடா, பாலிங், கோலா கேடில்-லில், சாலை முச்சந்தியிலுள்ள சமிக்ஞ்சை விளக்கின் முன்புறம் நிகழ்ந்த அந்த விபத்தில் தலைப்பகுதியில் பலத்த காயங்களுக்கு இலக்கான நபர் 43 வயது ஓய் சு சிங்க் என அடையாளம் கூறப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் முன்னே நின்றிருந்த வாகனத்தை முந்தி செல்ல முட்ப்பட்டுள்ளார். அப்போது, வலது பக்கம் செல்வதற்காக நின்றுக்கொண்டிருந்த அந்த மோட்டார்சைக்கிளோட்டியைப் பார்க்காத அவர், அவரது மோட்டார்சைக்கிளை வேகமாக மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரியவந்துள்ளது.

எதிர்தடத்தில் தூக்கியெறியப்பட்ட அந்த மோட்டார்சைக்கிளோட்டி கடும் காயத்திற்கு இலக்காகி உயிரிழந்ததாக, பாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் ஷம்சுதீன் மாமாட் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்