காராக், மார்ச் 29-
காராக் பென்த்தொங் நெடுஞ்சாலையில் புக்கிட் திங்கி, லென்தாங்-கை நோக்கி செல்லும் சாலையின் 51.4ஆவது கிலோமீட்டரில் சுற்றுலா பேருந்து ஒன்று சாலையில் குடை சாய்ந்ததில் அதில் பயணித்த 16 பேர் காயமடைந்தனர்.
அவர்களில் 12 உள்நாட்டவர்கள்; எஞ்சிய நால்வர் வெளிநாட்டினராவர்.
லென்தாங் ஓய்வுதளத்திற்கு அருகில் குடை சாய்ந்த ஹினோ வகையான அந்த பேருந்து, சம்பவத்தின் போது, கிழக்கை நோக்கி சென்றுக்கொண்டிருந்ததாக நம்பப்படுகின்றது.
அதில், சிக்கிக்கொண்ட ஒரு பெண் வெற்றிகரமாக மீட்கப்பட்ட வேளையில் ஒரு பெண் உட்பட மேலும் நால்வர் தீயணைப்பு மீட்பு படையின் அவசர மருத்துவ மீட்பு சேவையின் வழி, பென்த்தொங் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தகவல் பெற்றதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பென்த்தொங் தீயணைப்பு மீட்பு படையினர், காயமடைந்த அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.