நகை திருடிய குற்றத்திற்காக இருவர் கைது

தாமான் பண்டான் மெஸ்ரா, மெஸ்ரா வில்லாவில் ஒரு பெண்ணிடம் நகைகளை திருடிய குற்றத்திற்காக 26,38 வயதிற்கு உட்பட்ட இரு நபர்கள் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

முதல் சந்தேகிக்கும் நபர் பிப்ரவரி 12 ஆம் தேதி மாலை 6:30 மணியளவில் தாமான் பண்டான் மெஸ்ராவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனை மேற்கொண்ட பிறகு மற்றொரு சந்தேகிக்கும் நபர் பிப்ரவரி 14 ஆம் தேதி சிலாங்கூர் சுங்கை பூலோவில் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா போலீஸ் தலைவர் ACP Mohd Azam Ismail தெரிவித்தார்.

அதில் முதலில் கைது செய்யப்பட்ட நபர் பாதிக்கப்பட்ட 56 வயதுடைய மதிக்கத்தக்கவருக்கு தொடர்புடையவர் என்றும் சமையல்காரராக இருக்கும் மற்றொரு நபர் நகைகளை வாங்குபவராக செயல்பட்டதாகவும் Mohd Azam கூறினார்.

அம்மூதாட்டி தனது படுக்கறையிலுள்ள அலமாரியில் வைத்திருந்த தங்க சங்கிலி காணவில்லை என்றும் அதற்கு பதிலாக போலியான மற்றொரு சங்கிலி இருந்ததாகவும் 30,000 வெள்ளி இதில் நஷ்டப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக நேற்று ஓர் அறிக்கையில் Mohd Azam குறிப்பிட்டார்.

இதுக்குறித்து, குற்றவியல் சட்டம் 380 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்